Wednesday, July 10, 2013
கிழவி என்று நினைத்துவிடாதே
பதினோராம் நூற்றாண்டில் மால்வா நாட்டை ஆண்ட ராஜா போஜனுக்குகல்வி கேள்விகளில் விருப்பம் அதிகம். அவருடைய காலத்தில் அனைத்துமக்களும் கல்வி பெற்று விளங்கினார்கள். அவர்களுக்கு நிறைய பேச்சுசுதந்திரமும் இருந்தது.அவருடைய அவையில் மிகச்சிறந்த கல்விமான்கள்இருந்தனர். அரசருக்கு இந்தப்புலவர்களுடன் அளவளாவுவதில் மிகவும்விருப்பம்.
ஒரு நாள் அண்டைய அரசின் பண்டிதர் ஒருவர் போஜனுடைய அவைக்குவந்தார்.அரசர் அவருடன் பேசிக்கொண்டே கிராமப்புறமாக நடந்து சென்றார்.பல சுவையான விஷயங்களைப்பற்றிப் பேசியதில் நேரம் போனதேதெரியவில்லை. வழியும் தவறிப்போயிற்று. ஒரு வயலில் வேலைசெய்துகொண்டிருந்த மூதாட்டியிடம் அரசர்,'அம்மா! இந்த சாலை எங்கேபோகிறது?' என்று கேட்டார். அதற்கு அவள், 'இந்த சாலை எங்கும் போகாது.இதில் நடப்பவர்கள் தாம் எங்காவது போவார்கள்.ஆமாம், நீங்கள் யார்?'என்றாள்.
'நாங்கள் பயணிகள்' என்றனர் அவர்கள்.
ஒரு புன்னகையுடன் மூதாட்டி கூறினாள்:, 'இந்த உலகில் இரண்டேபயணிகள் தாம் இருக்கிறார்கள். ஒன்று சூரியன்;மற்றது சந்திரன். நீங்கள்யார்? உண்மையைக்கூறுங்கள்'.
'அம்மா! நாங்கள் விருந்தாளிகள்' என்றனர்.
'உலகில் இரண்டே விருந்தினர் தாம் உண்டு- ஒன்று செல்வம்; மற்றதுஇளமை. சொல்லுங்கள், நீங்கள் யார்?'
'நாங்கள் அரசர்கள்' என்றனர்.
'அரசர்கள் இரண்டே பேர். ஒருவர் இந்திரன்; மற்றவர் யமன். நீங்கள் யார்?'
இதற்குள் அரசருக்கும் அவருடன் இருந்த புலவருக்கும் அந்த மூதாட்டியின்அறிவுத்திறமையைக்கண்டு மிகுந்த வியப்பு ஏற்பட்டது.
தயங்கித்தயங்கி, 'நாங்கள் திறமைசாலிகள்' என்றனர்.
'திறமைசாலிகள் இரண்டே பேர்-பூமி மற்றும் பெண். உங்களைப்பார்த்தால்இந்த இரண்டு மாதிரியும் தெரியவில்லை. நீங்கள் யார்?'
சிறிது துணிச்சலை வரவழைத்துக்கொண்டு அவர்கள் சொன்னார்கள், 'நாங்கள் பரதேசிகள்'
'நீங்கள் பரதேசிகள் இல்லை. உடலில் உள்ள ஆன்மாவும் மரத்தில் உள்ளஇலையும் தான் பரதேசிகள். உண்மையில் நீங்கள் யார்?'
அரசருக்கும் அந்தப்பண்டிதருக்கும் வியப்புக்கு மேல் வியப்பு. ஆனாலும்ஒரு கிராமத்து மூதாட்டியிடம் எப்படி தோல்வியை ஒத்துக்கொள்வது?
'நாங்கள் ஏழைகள்' என்றார்கள்.
'இரண்டே ஏழைகள் தான் உலகில் உண்டு. கொல்லப்படுவதற்காகவேபிறக்கும் ஆடும், திருமணம் செய்து கொடுக்கப்படுவதற்காகவே பிறக்கும்பெண்குழந்தையும் தான். சொல்லுங்கள், நீங்கள் யார்?'
வேறு வழியே இல்லாமல் இருவரும் சொன்னார்கள், 'அம்மா! நாங்கள்என்ன சொல்ல? எங்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை. உங்களுக்குத்தான்எல்லாமே தெரிந்திருக்கிறது.'
இதைக்கேட்ட மூதாட்டியின் முகம் புன்னகையால் விரிந்தது.மென்மையான் குரலில் கூறினாள், 'அப்படி வாருங்கள் வழிக்கு. நீங்கள்போஜ ராஜா என்பதையும் இவர் உங்களுடைய விருந்தினர்உங்களைப்பார்த்த உடனேயே தெரிந்து கொண்டு விட்டேன்.உங்கள்இருவருக்கும் உங்களுடைய அறிவுத்திறமையின் மேல் கொஞ்சம் கர்வம்வந்து விட்டது. ஆகவே தான் இப்படியெல்லாம் பதில் சொன்னேன். இந்தவழியிலேயே செல்லுங்கள். இது உங்கள் அரண்மனைக்குச் செல்லும்.'
இருவரும் மூதாட்டியை வணங்கி நன்றி சொல்லி விடை பெற்றார்கள்.
(இந்த மூதாட்டி சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும் எவ்வளவு ஆழமான பொருள்! )
(மன்னரிடம் துணிச்சலுடன் பேசும் பெண்ணும், சாதாரணப்பெண்ணைப் பேசஅனுமதித்து அவளிடம் இருந்து அறிவுரைகளைப் பணிவோடுகேட்டுக்கொள்ளும் மன்னனும் நம் பாரத நாட்டில் தான்இருந்திருக்கிறார்கள்!)
ஆதாரம்: Indian Tales & Folk Tales
சிறப்பான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!
Ma'm - can you explain the above? for rest others it was easy to understand; but this one am unable to get it. Thanks for posting a wonderful article.